மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
பாலாவின் தாரைதப்பட்டையோடு ஆயிரம் படங்களுக்கு இசையமைத்துவிட்ட இளையராஜாவின் கைவசம் இப்போது பல படங்கள் உள்ளன. இந்தியில் அமிதாப்பச்சன்-தனுஷ் நடித்த ஷமிதாப் படத்துக்கு இசையமைத்தவர், தற்போது பிரமாண்ட சரித்திர படமான ராணி ருத்ரம்மா தேவி, தாரைத்தப்பட்டை, மகுடி, நாடி துடிக்குதடி, கலைஞனின் காதல், வாராயோ வெண்ணிலாவே, காமராஜ் உள்பட மேலும் சில படங்களுக்கு பிசியாக இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.
இதுதவிர இந்தியில் ஹேப்பி மற்றும் கன்னடத்தில் நானு நீனு ப்ரீத்தி என பல படங்களுக்கு பரவலாக இசையமைத்து வருகிறார். ஆனால், அவர் பீல்டில் பிசியாக இசையமைத்துக்கொண்டிருக்கும்போதே, அவரது ஹிட் பாடல்களை சில படங்களில் ரீமிக்ஸ் செய்தனர். இதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இப்போது அதை நிறுத்தி விட்டனர்.
மாறாக, பல படங்களில் சூழலுக்கேற்ப அவரது சூப்பர் ஹிட் பாடல்களை பிட் பிட்டாக பயன்படுத்தி வருவது குறையவில்லை. இந்த சேதி இளையராஜாவின் காதுக்கு செல்லும்போது ரொம்பவே கோபப்படுகிறாராம். அவர்கள் இசையமைக்கும் படங்களுக்கு அவர்களே டியூன் போட வேண்டியதானே. அதை விட்டுவிட்டு எனது பாடல்களை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்று கூறும் இளையராஜா, விரைவில் தனது ஹிட் பாடல்களை தான் இசையமைக்காத படங்களில் பயன்படுத்துவதற்கும் கண்டனம் தெரிவிக்கப்போகிறாராம்.