பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
நடிகர் ஆரி நடித்த முதல்படம் ஆடும் கூத்து தேசிய விருது பெற்றது. அது ஒரு விருதுப்படம். வணிக சினிமாவில் ஆரி அறிமுகமான முதல்படம் ரெட்ட சுழி ,இது பாலசந்தர், பாரதிராஜாவுடன் இணைந்து நடித்த படம். பிறகு நெடுஞ்சாலை, மாலைப் பொழுதின் மயக்கத்திலே என்று நடித்தார். நெடுஞ்சாலையில் கிடைத்த பெயர் நல்ல மைலேஜ் கொடுத்தது. அண்மையில் வந்த தரணி ஆரிக்கு நல்ல நடிகர் என்கிற சான்றிதழைத் தேடித் தந்தது. இருந்தாலும் கவர்ச்சிகரமான பெயர் இதுவரை வரவில்லை. இப்போது வந்து விட்டது. மாயா படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறார் இது போதாதா?
மாயா படத்தை இயக்கியுள்ள அஸ்வின் சரவணன் யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாதவர். படப்பிடிப்பு சென்னை தாண்டி புறநகர் பகுதிகளில் நடந்துள்ளது. 45 நாளில் படத்தை முடித்துள்ளார்கள்.
இது ஒரு பேய்ப்படமா என்றால் இது ஒரு சூப்பர் நேச்சரல் படம் என்கிறார்கள். நயன்தாரா பற்றி ஆரி புகழ்ந்து தள்ளுகிறார். அவர் காலையில் படப்பிடிப்புக்கு வந்ததும் தான் பெரிய நடிகை என்பதை எல்லாம் மறந்து முதலில் தேடிவந்து அனைவருக்கும் குட்மார்னிங் சொல்வார். தலைக்கனம் இல்லாதவர். பெரிய, சிறிய ஆள் என்று பார்க்காமல் சம மரியாதை தருபவர்." என்கிறார் .
நயன்தாரா படத்தில் வந்து விட்டதால் இனி நடிகர் ஆரியும் கூட பேசப்படுவார்.