ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியத் திரையுலகிற்கே நவீன மேக்கப் கலையை அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன் என்றால் அது மிகையில்லை. 'இந்தியன்' படத்திலேயே 'இந்தியன் தாத்தா'வாக அப்படியே 70 வயது முதியவர் தோற்றத்தை தன்னுடைய 40வது வயதில் நடித்துக் காட்டியவர். 'அவ்வை சண்முகி' படத்தில் அச்சு அசலான பாட்டியை கண் முன் நிறுத்தியவர். 'தசாவதாரம்' படத்தில் அவர் நடித்த பத்து விதமான கதாபாத்திரங்களும் மேக்கப் என்பதை எப்படிச் செய்ய வேண்டும் என்று காட்டியவர்.
அப்படிப்பட்ட கமல்ஹாசனே, வெளிவர இருக்கும் 'பாபநாசம்' படத்தில் ஒட்டு மீசை வைத்துக் கொண்டு நடித்த காட்சிகள் டிரைலரில் இடம் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தின. கமல்ஹாசனே இப்படி மேக்கப்பில் அக்கறையில்லாமல், கவனம் இல்லாமல் செய்திருக்கிறார் என்று விமர்சகள் கேள்வி எழுப்பும் வண்ணம் அமைந்தது. நேற்று நடைபெற்ற 'பாபநாசம்' பத்திரிகையளார் சந்திப்பில் இது குறித்து கேட்ட போது, “படம் முழுவதும் நான் அப்படி நடிக்கவில்லை. ஒரு சில காட்சிகளில் மட்டுமே அப்படி நடித்துள்ளேன். கால்ஷீட் பிரச்சனையால் அந்தக் காட்சிகளை எடுத்தாக வேண்டிய சூழ்நிலை, அதனால்தான் அப்படி நடிக்க நேர்ந்தது,” என்றார்.
மொத்தம் 39 நாட்களில் படத்தை முடித்தார்கள் என படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீப்ரியா தெரிவித்தார். மீசைக்காக இன்னும் நான்கு நாட்கள் காத்திருந்தால் தவறில்லையே. 'நீங்கள் உன்னிப்பாகப் பார்த்தால்தான் அது தெரியும்,” என்றார் கமல்ஹாசன். உங்கள் படங்களை உன்னிப்பாகக் கவனித்துப் பார்ப்பதுதானே எங்கள் வழக்கம், கமல் அவர்களே. ஒரு வேளை மீசைதானே என்று விட்டு விட்டீர்களோ...!