ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கோலங்கள் தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை தேவயானி. அதையடுத்து, மஞ்சள் மகிமை, கொடி முல்லை, முத்தாரம் ஆகிய தொடர்களில் நடித்தார். இதில் முத்தாரம் தொடரில் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்தார் தேவயானி. அந்த வகையில், ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகளுக்கு மத்தியில் தேவயானியும் சின்னத்திரையை கலக்கிக்கொண்டிருந்தார். அவருக்கென ஏராளமான நேயர்களும் இருந்தனர். இருப்பினும், பின்னர் அவரை எந்த சீரியல்களிலும் காண முடியவில்லை. ஆனால் அதன்பிறகு திருமதி தமிழ் படத்தில் நடித்த அவர், கடைசியாக விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார்.
இந்தநிலையில், அவ்வப்போது தேவயானிக்கு சீரியல் வாய்ப்புகளும் சென்றவண்ணம்தான் உள்ளதாம். ஆனால், அப்படி செல்லும் எல்லா சீரியல்களுமே ஏற்கனவே நடித்தது போன்றே உள்ளதாம். ஏற்கனவே நடித்தது போன்ற கதைகளில் மீண்டும மீண்டும் நடிப்பதில் ஆர்வம் இல்லாத தேவயானி அந்த வாய்ப்புகளை திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறாராம்.