ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எங்களின் கோரிக்கைகளை சரத்குமார் அணி ஏற்றுக் கொண்டால் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட மாட்டேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க விவகாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில் நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு கேட்பதற்காக விஷால் தலையிலான நடிகர்கள் குழு இன்று காலை மதுரை வந்தது. நடிகர்கள் நாசர், பொன்வண்ணன், கார்த்தி, விஷால் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, எங்களின் கோரிக்கைகளை சரத்குமார் அணி ஏற்றுக் கொண்டால் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட மாட்டேன். பதவி மோகத்திற்காக நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடவில்லை என விஷால் கூறினார்.
நடிகர் சங்கத்திற்கு தனி கட்டிடம் கட்ட சரத்குமார் தரப்பு ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் ஒப்புக் கொண்டால் இலவசமாக திரைப்படங்களில் நடித்து கட்டிடம் கட்டுவதற்கான நிதியை பெற்றுத் தருகிறோம். சரத்குமார் சொல்வது போல் இதில் அரசியல் பின்னணி எதுவும் கிடையாது என விஷால் அணியினர் தெரிவித்துள்ளனர்.