‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நகுல், நிகிஷா பட்டேல், ஸ்ருதி ராமகிருஷ்ணன், பிரேம்ஜி நடித்துள்ள படம் நாரதன். நாகா.வெங்கடேஷ் இயக்கி உள்ளார். வெற்றிவேல் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் சஜித் நம்பியார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு நகுல் வராமல் புறக்கணித்தார். பேசியபடி முழு சம்பளத்தையும் பெற்றுக் கொண்டு தனது புது மானேஜரின் பேச்சை கேட்டுக் கொண்டு நகுல் படத்தை புறக்கணிப்பதாக படத்தின் இயக்குனர் நாகா.வெங்கடேஷ் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் தனக்கு ஒப்பந்தப்படி சம்பளம் தரவில்லை என்று நகுல் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தயாரிப்பாளர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் சாராம்சம் வருமாறு:
நாரதன் படத்தில் நடிக்க எனக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. படம் முடிந்து விட்ட பிறகும் ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பளத்தை முழுமையாக தரவில்லை. இதுவரை 32 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளனர். படத்தின் ஆடியோ விழாவிற்கும், புரமோசஷனுக்கும் முறையாக அழைக்கவில்லை. எனக்கு சேர வேண்டிய 18 லட்சத்தை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நகுல் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.