'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2014ம் ஆண்டு 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்து தமிழ்த் திரையுலகில் புதிய சாதனையை ஏற்படுத்தியது. அந்த சாதனையை 2015ம் ஆண்டு முறியடித்து விடும் என்றே தோன்றுகிறது. 2015ம் ஆண்டின் ஆறு மாதம் முடிய இன்னும் பத்து நாட்கள் இருக்கும் சூழ்நிலையில் நாளை வெளியாகும் படங்களையும் கணக்கில் சேர்த்துக் கொண்டால் இதுவரை 2015ல் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 100ஐத் தொடுகிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் 100 படங்களைத் தொடுவது தமிழ்த் திரையுலக வரலாற்றில் இதுவே முதல் முறை.
ஜனவரி மாதத்தில் சுமார் 17 படங்களும், பிப்ரவரி மாதத்தில் 12 படங்களும், மார்ச் மாதத்தில் 31 படங்களும், ஏப்ரல் மாதத்தில் 11 படங்களும், மே மாதத்தில் 17 படங்களும், ஜுன் மாதத்தில் நாளை வெளியாகும் படங்களையும் சேர்த்தால் 12 படங்களும் கணக்கில் வருகின்றன. இந்த 100 படங்களில் ஓரளவிற்கு ஓடிய படங்கள் என்று பார்த்தால் 5 படங்களைத்தான் சொல்ல முடியும். அந்த அளவிற்கு படங்கள் வருவதும், போவதுமாகவே உள்ளன.
எதிர்பார்த்த படங்கள் மிகப் பெரும் தோல்வியடைவதும், எதிர்பாராத சில படங்கள் ஓரளவிற்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதுமாக உள்ளன. இந்த 100 படங்களில் சுமார் 700 கோடி ரூபாய் அளவிற்காவது முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். அவற்றின் மூலம் ஏற்பட்ட லாபத்தை விட நஷ்டமே அதிகம் என்பதுதான் வருத்தப்பட வைக்கும் உண்மை.