பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மணிரத்னத்தின் பெருமைக்குரிய அறிமுகம் என்று கடல் படத்தில் நடித்தவர் மாஜி ஹீரோயின் ராதாவின் இளைய மகள் துளசி நாயர். ஆனால், அந்த படம் தோல்வியடைந்தது. பின்னர் ரவி கே.சந்திரனின் யான் படத்தில் நடித்தார் அவர். அந்தபடமும் வெற்றி பெறவில்லை. அதனால் இப்போது படமே இல்லாமல் இருக்கிறார் அவர்.
இந்தநிலையில், கோ என்ற வெற்றிப் படத்தில் நடித்த அவரது அக்கா கார்த்திகா நாயர், பின்னர் பாரதிராஜாவின் அன்னக்கொடி மற்றும் எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்க்கப்பட்ட அந்த இரண்டு படங்களுமே கார்த்திகாவுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளன.
குறிப்பாக, புறம்போக்கு படத்தில் அவர் உயிரை கொடுத்து நடித்ததாக அப்படத்தின் டைரக்டர் ஜனநாதனே சில மேடைகளில் கார்த்திகா புகழ் பாடினர். அது உண்மையு கூட. ஆனால் அப்படி நடித்தபோதும் கார்த்திகாவுக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. இதனால் அக்கா - தங்கை இருவரும் கவலையில் இருக்கிறார்கள். அதேசமயம் சினிமா வாய்ப்புகள் பெரிதாக இல்லையென்றால், அடுத்து ஹோட்டல் பிஸ்னசிலேயே முழுநேரத்தையும் செலவிடலாமா? என்றும் யோசித்து கொண்டிருக்கிறாராம் கார்த்திகா.