இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் திரு ஆப்பனூர் மாசா. முத்துவிஜயன் என்பவர் தயாரித்து, இயக்குகிறார். எம்.ஆர்.கே.மூவர் இசை அமைக்கிறார். ராஜ்குமார், ரூபேஷ், சவுமியா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.
"எங்கள் ஊரான ஆப்பனூரில் புகழ்பெற்ற சிவஸ்தலம் உள்ளது. இங்கு நடக்கும் மாசா திருவிழா புகழ்பெற்றது. அந்த திருவிழா காலத்தில் நடக்கும் கதை. உள்ளூரைச் சேர்ந்த ஹீரோ, ஹீரோயின் காதலிக்கிறார்கள். ஹீரோயின் தந்தை காதலை எதிர்த்தால் மகள் தற்கொலை செய்து கொள்வாள், ஆதரித்தால் ஊர் விலக்கி வைத்து விடுவார்கள் இந்த சிக்கலில் இருந்த தப்பிக்க அந்த தந்தை என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. காதல் வெற்றி பெற காதலர்கள் இருவரும் தமிழ் நாட்டில் உள்ள 14 புகழ்பெற்ற சிவஸ்தலங்களை சுற்றி வருவார்கள். அதனால் 14 சிவன் கோவில்களுக்கும் சென்று படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். சிவனை புகழ்ந்து வரும் ஒரு பாடலில் 14 கோவில் காட்சிகளும் இடம்பெறுகிறது" என்கிறார் இயக்குனர் முத்து விஜயன்.