தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காக்கா முட்டையில் அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் மனங்கொள்ளாத மகிழ்ச்சியில் இருக்கிறார். பலரும் அவரது நடிப்பைப் பாராட்டினாலும் குஷ்பூ பாராட்டியதை மறக்க முடியவில்லையாம். நீளமாகப் பாராட்டிப் பேசியவர் தன்னை ஸ்மிதா பாட்டீலுடன் ஒப்பிட்டுப் பேசியது இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்கிறார் ஐஸ்வர்யா . இந்த நேரம் ஐஸ்வர்யா நினைவில் அலையடிக்கும் விஷயம் என்ன என்றால், " பலரும் இதுமாதிரி சீரியஸான படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் .நீ வளர்ந்து வரும் கதாநாயகி நடிகை. இப்போது போய் பெரிய பசங்களுக்கு அம்மாவாக நடிப்பதா? உன்முடிவை மாற்றிக் கொள் என்று அறிவுரை கூறினார்கள்.
டைரக்டர் மீது நம்பிக்கை இருந்ததால் நடித்தேன். இருந்தாலும் எனக்குப் பயமாக இருந்தது.படம் நல்ல படம்தான். ஆனால் ஓடவேண்டுமே.
அறுபது நாட்கள் சைதாப்பேட்டை, காசிமேடு என்று குப்பம் குடிசைகளில் படப்பிடிப்பு நடந்தது. அழுக்கு மேக்கப்புடன் நடித்தேன். அந்த இரண்டு பசங்களும் நடிக்கவில்லை. இயல்பாக இருந்தார்கள். அப்படியே அவர்கள் போக்கில் போகவிட்டுத்தான் டைரக்டர் எடுத்தார்.. நான் காக்கா முட்டை படத்தின் முதல் ஷோ பார்த்தபோது பதற்றத்தில் என்னை நம்பவே முடியவில்லை. ஒன்றுமே புரியவில்லை.மறுமுறை பார்த்தபோது தான் படமே எனக்கு புரிந்தது. அப்போது அவ்வளவு பதற்றமாக இருந்தது.
காக்கா முட்டை பார்த்து பலரும் பாராட்டுகிறார்கள். வசூல் ரீதியாகவும் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது பெரியவிஷயம். இன்னும் கூட டிக்கெட் கிடைக்கவில்லை என்கிற விஷயம் கேள்விப்படும் போது நான்அடைகிற சந்தோஷத்தைவிட வேறென்னபெரிதாக இருக்க முடியும்? இப்போது எல்லாரும் பாராட்டும் போது அப்போது மனசு மாறி நடிக்காமல் இருந்திருந்தால் எப்படிப்பட்ட படத்தை இழந்திருப்போம் ?நான் எப்போது முடிவெடுத்தாலும் சரியாகவே இருக்கும் எனத்தோன்றியது. கடவுளுக்கு நன்றி" என்கிறவர் விருது கிடைக்காதது பற்றிக் கேட்டால். "படத்துக்கு விருது கிடைத்ததில் சந்தோஷம். என்னை இப்படி கேட்பதே விருது கிடைத்தமாதிரிதான் உணர வைக்கிறது.
நான் வளர்ந்து வரும் நடிகை. இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது எனவே அது பற்றி கவலைப்பட நேரமில்லைஎன்கிறார்.