சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
ஜிகர்தண்டாவுக்கு பிறகு படவாய்ப்பு இல்லாமல் இருந்தார் லட்சுமிமேனன். அப்போது குட்டிப்புலி டைரக்டர் முத்தையா தனது கொம்பன் படத்திற்கு மீண்டும் அவரை புக் பண்ணினார். ஆக, அந்த படத்திலும் கிராமத்து கெட்டப்பில் நடித்து மீண்டும் தன்னை தக்க வைத்துக்கொண்டார் லட்சுமிமேனன். ஆனால், அந்த படத்திற்கு பிறகு அவர் பரீட்சைக்காக கேரளா சென்றவர், பின்னர் கல்லூரி படிப்பை தொடரப்போவதாகவும் சொன்னார். அதனால் அவர் சொல்லும் தேதியில் படப்பிடிப்பு நடத்துவது இயலாத காரியம் என்று லட்சுமிமேனனை நடிக்க வைக்க நினைத்திருந்த சில டைரக்டர்கள் வேறு நடிகைகள் பக்கம் தாவினர்.
அதனால்தான் கல்லூரிக்கு ரெகுலர் கிளாஸ் செல்லாமல் ஒரு கோர்ஸ் எடுத்து படித்துக்கொண்டே சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் தங்கையாக நடித்துக்கொண்டிருக்கிறார் லட்சுமிமேனன். அதோடு தங்கை வேடத்திலும் தனது வழக்கமான முத்திரையை பதித்துக்கொண்டு வரும் அவரிடத்தில், தங்கையாக நடித்த பிறகு கதாநாயகியாக நடிப்பது கடினம் என்று கோலிவுட்டின் சென்டிமென்ட்டை கூறி சிலர் அவரை அச்சுறுத்துகிறார்களாம்.
ஆனால் அதைக்கேட்டு துளியும் அஞ்சவில்லையாம் லட்சுமிமேனன். தங்கை வேடம் என்றாலும் நான் நடிப்பது அஜித் படம். அதோடு, அந்த படம் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக்கொண்ட கதை. அந்த வகையில் பார்க்கப்போனால், கதைப்படி நான்தான் கதாநாயகி. அதனால் அதை காரணம் காட்டி எனக்கு மீண்டும் கதாநாயகி வாய்ப்பு தர எந்த இயக்குனர்களும் தயங்கமாட்டார்கள். அந்த வகையில், நான் கோடம்பாக்கத்தில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை என்கிறாராம் லட்சுமிமேனன்.