டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்த சிங்கம், சிங்கம் 2 படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது சிங்கம் படத்தின் மூன்றாம் பாகத்தை ஹரி இயக்க உள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர முதல் இரண்டு பாகத்திலும் நடித்த ராதாரவி, நாசர் போன்ற முக்கிய கேரக்டர்கள் மூன்றாம் பாகத்திலும் தொடர்கிறார்கள். ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார் காரைக்குடி மற்றும் தூத்துக்குடி பகுதியில் செப்படம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. கோவா மற்றும் பிரான்சில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.
தற்போது இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் படங்கள் நிறைய வந்தாலும் ஒரே கதை தொடர்ச்சியாக மூன்றாம் பாகமாக வருவது சிங்கம் 3 தான். முதல் பாகத்தில் சூர்யாவின் காதலியாக நடித்த அனுஷ்கா, இரண்டாம் பாகத்தில் மனைவியாக நடித்தார். அவரை ஒருதலையாய் காதலிக்கும் பள்ளி மாணவியாக ஹன்சிகா நடித்தார். மூன்றாம் பாகத்திலும் அனுஷ்கா, சூர்யாவின் மனைவியாக நடிக்கிறார். மேற்கண்ட தகவல்களை இயக்குனர் ஹரி வெளியிட்டிருக்கிறார்.
இந்தப் படத்தின் கதையை ஹரி தன் உதவியாளர்களுடன் வெளிநாட்டிற்கு சென்று 3 மாதம் முகாமிட்டு உருவாக்கி இருக்கிறார். இங்கு வந்து 6 மாதங்கள் திரைக்கதை அமைக்க செலவிட்டிருக்கிறார். இந்த பாகத்தில் சூர்யா, அனுஷ்கா தம்பதிகளுக்கு 3 வயதில் குழந்தை இருப்பதாக கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. சூர்யாவை காதலிக்கும் பெண்ணாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். "ஓங்கி அடிச்சா ஒண்றை டன் வெயிட்டு" முதல் பாகம். "உலகத்தின் எந்த மூலையில இண்டு இடுக்குல நீ இருந்தாலும் உன்னை பிடிச்சு இழுத்துகிகட்டு வருவேன்" இது பாகம் இரண்டில். பாகம் மூன்றின் பன்ஞ் "குற்றவாளியை கைது செய்றது மட்டும் போலீஸ் வேலை இல்லை. குற்றமே நடக்காம தடுக்கிறதுதான் போலீஸ் வேலை" என்பதாகும். சூர்யா போலீசாக நடிக்கும் 4வது படம், ஹரி, சூர்யா இணையும் 5வது படம்.