மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கோச்சடையான் படம் தொடர்பாக நான் யாருக்கும் எந்த உத்தரவாதமும் தரவில்லை, வீணாக என் மீது பழி சுமத்துகின்றனர். என் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நான் நடவடிக்கை எடுப்பேன் என லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
லதா ரஜினிகாந்த் மீது எப்.ஐ.ஆர்., பதிவு
ரஜினிகாந்த் நடிப்பில், அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில், வெளியான அனிமேஷன் படம் கோச்சடையான். மோசன் கேப்ட்சரிங் தொழில்நுட்பத்தில் உருவான இப்படம் தோல்விப்படமாக அமைந்தது. இப்படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதலில் படத்தை வெளியிட முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால் படத்தை முடித்து திரையிட ஆட் பியூரோ நிறுவனத்திடம் 6.84 கோடி ரூபாய் கடன் கேட்டது. இதற்கு ரஜினி மனைவி லதா பெங்களூருவில் உள்ள தன்னுடைய சில சொத்துகளை உத்தரவாதமாக காண்பித்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த சொத்துக்கள் சரியான ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ஆட்பியூரோ நிறுவனம் பெங்களூரு கூடுதல் முதன்மை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் லதா மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யுமாறு பெங்களூரு போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து ஹலசூரு கேட் போலீசார் லதா ரஜினி மீது மோசடி ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக லதா ரஜினிகாந்த் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது...
ஆட் பியூரோ நிறுவனம் அளித்த புகாரின் பேரில் என் மீது எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ளதாக எனக்கு செய்தி வந்தது. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க ஆதரமற்றது. என் குடும்பத்தின் மீது அவதூறு பரப்பவும், குறுக்குவழியில் ஆதாயம் தேடவும் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோச்சடையான் படத்திற்காக நான் எந்த உத்தரவாதவும் கொடுக்கவில்லை.
கடந்த ஓராண்டாகவே அபிர்சந்த்தும், அவரது மனைவியும் குறுக்கு வழியில் எனக்கு பல நெருக்கடிகள் கொடுத்தனர். 2012ம் ஆண்டிலேயே என் மீது சவுதா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். ஆனால் அந்த புகார் பொய்யானவை என்று தெரிந்ததும் போலீசார் அவர்கள் இருவரையும் எச்சரித்து அனுப்பினர். அபிர்சந்த் நஹர், சஞ்சல் நஹர் இருவரின் நோக்கமும் செயலும் மோசடியானது. தவறான பணம் சம்பாதிக்கும் எண்ணம் கொண்டது. ஒரு பிரபலம் என்பதை பயன்படுத்தி என் குடும்பத்தின் மீதும், என் மீதும் அவதூறு செய்தி பரப்பி வருகின்றனர். என் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த அவர்கள் இருவரும் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு லதா ரஜினிகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.