பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காஞ்சனா-2 படம் பார்த்தவர்கள் அதில் வந்த ராகவா லாரன்ஸின் பேய்களையும் மொடமொட.... சில்லாட்டா பாடல் கலாட்டாக்களையும் மறந்திருக்க மாட்டார்கள். அதேப்போல நித்யாமேனனிடம் தவறாக நடந்து கொள்ளும் அந்த சைக்கோ சங்கரையும் மறந்திருக்க மாட்டார்கள். சிலநிமிடங்கள் அதிர்ச்சியூட்டிய கேரக்டர் அது. அதில் நடித்துள்ளவர் யோகிராம்.
இதற்கு முன் சுமார் 30 படங்களுக்கும் மேல் பலவித பாத்திரங்களில் நடித்து இருந்தாலும் காஞ்சனா 2 வந்த பிறகுதான் முகம் தெரிந்தவராகியுள்ளார். ஆனால் வெளியில் தலைகாட்ட முடியவில்லையாம். திடீரென இவரை அடையாளம் தெரியாவிட்டாலும் சில வினாடிகள் உற்றுப் பார்த்தும் ஏய் அவனா நீ என்று முறைக்கிறார்களாம். படம் பார்க்க தியேட்டருக்குப் போனால் அவரைக்கண்டு கொண்ட பெண்கள் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார்களாம். சிலர் அடிக்க வருவது போல முறைக்கிறார்களாம். அப்போது சமாளித்து வெளியேறினாலும், தன் கேரக்டர் மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளது என்று உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைகிறாராம் யோகிராம். இப்போதுதான் இவர் முகம் அடையாளம் பெற்றிருக்கிறது என்றாலும் இதற்கு முன் பல படங்களில் வந்திருக்கிறார்.
அப்படியா தெரியவில்லையே என்றால் முதல் படமான பையா வில் மும்பை வல்லன் மிலிந்த் சோமனுடன் நடித்திருக்கிறாராம். விஜய்யுடன் காவலன், அருள்நிதியுடன் உதயன் , ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், தனுஷுடன் மயக்கம் என்ன, விக்ரமுடன் ராஜபாட்டை போன்ற படங்களில் நடித்துள்ளதைக் கூறியவர் இசக்கி, தமிழ்ச்செல்வனும் கலைச்செல்வியும் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளதையும் கூறுகிறார்.
இப்போது தனி ஒருவன், எங்க காட்டுல மழை, நாரதன், தாக்க தாக்க, உள்ளிட்ட 7 படங்களில் நடித்து வருகிறார். விழுப்புரத்தைச் சேர்ந்த இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். டிநெட் சம்பந்தப்பட்ட கோர்ஸ்கள் என மேலும் படித்து வட இந்தியாவில் வேலை பார்த்துள்ளார். நீ ஏன் மாடலிங் செய்யக் கூடாது? என்று நண்பர்கள் உசுப்பி விட சினிமாவுக்குள் நுழைய விருப்பம் வந்துள்ளது. படாதபாடு பட்டு முட்டி மோதி நுழைந்து விட்டார். லண்டனில் வந்த நல்ல வேலையை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு குடும்பத்தினர் வயிற்றில் நெருப்பைக் கட்டி வைத்துவிட்டு சினிமாவுக்கு வந்து விட்டார். விதி யாரை விட்டது?.
நடித்த பல படங்களில் மட்டுமல்ல நடிக்கிற படங்களிலும் பெரும்பாலும் வில்லன் தானாம், வசவுகளையே வாழ்த்தாக கருதுகிறாராம். அப்படிப்பட்ட வில்லனான இவர் நிஜத்தில் பக்திமானாம். யோகிராம் சுரத் குமாரின் பெயர் தான் இவருக்கு வைக்கப்பட்டிருக்கிறது .அது மட்டுமல்ல இவர் ராகவேந்திரரின் தீவிர பக்தரும் கூடவாம்.