மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
1947ல் ராஜகுமாரி என்ற படத்திற்கு வசனம் எழுதத் தொடங்கியவர் கருணாநிதி. அதைத் தொடர்ந்து மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, பராசக்தி, மனோகரா, பாசப்பறவைகள், மண்ணின் மைந்தன், நியாய தராசு, பெண் சிங்கம், பொன்னர் சங்கர் உள்பட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.
அப்படி அவர் எழுதிய வசனங்கள் காலத்தால் அழியாமல் இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதோடு பல படங்களில் பாடல்களும் எழுதியிருக்கிறார் கருணாநிதி. இந்த நிலையில், சமீபகாலமாக சின்னத்திரையிலும் அவரது பேனா இடம் பெற்று வருகிறது. அந்த வகையில், தென்பாண்டி சிங்கம் உள்பட பல சீரியல்களுக்கு ஏற்கனவே கதை வசனம் எழுதியுள்ள கருணாநிதி, தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இராமானுஜர், ரோமாபுரி பாண்டியன் ஆகிய தொடர்களுக்கும் கதை வசனம் எழுதி வருகிறார்.
இதில் இராமானுஜர் என்ற இந்து மார்க்கத்தின் தொடருக்கு முதன்முதலாக தனது பேனாவை பயன்படுத்தி வருகிறார் கருணாநிதி. குறிப்பாக இந்த சீரியலின் கதை வசனங்கள் அவரது ஆலோசனையின் பேரில்தான் எழுதப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்த பிறகும், கடைசியில் மொத்த ஸ்கிரிப்டையும் படிக்கும் கருணாநிதி, ராமானுஜர் பற்றிய தான் அறிந்த பல விசயங்களையும் இணைத்து அனுப்புகிறாராம்.