‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கோச்சடையான் படம் தொடர்பாக பொய்யான ஆவணங்கள் தந்தமைக்காக நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா மீது பெங்களூரு போலீசார் எப்ஐஆர்., பதிவு செய்துள்ளனர். ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா, தன் அப்பா ரஜினியை வைத்து மோஷன் கேப்டசரிங் தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக தயாரித்த படம் கோச்சடையான். இப்படத்தை விற்றது தொடர்பாக ஆட்பீரோ என்ற நிறுவனத்துக்கும், லதா ரஜினிகாந்த்திற்கும் இடையே பணபிரச்னை உள்ளது.
இந்த நிலையில், கோச்சடையான் படத்தின் உரிமையை தங்கள் கவனத்துக்கு கொண்டுவராமல் விற்று மோசடி செய்தார் என லதா ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்ந்திருந்தார் அபிர்சந்த். மேலும் இந்த வழக்கில் பொய்யான ஆவணங்கள் சமர்பித்து மோசடி செய்த குற்றத்திற்காக லதா ரஜினிகாந்த் மீது எப்ஐஆர்., பதிவு செய்ய பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து லதா ரஜினிகாந்த் மீது பெங்களூர் போலீசார் எப்ஐர் பதிவு செய்துள்ளனர்.