பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
லிங்கா படத்தின் விநியோகஸ்தர்களுக்கு அறிவிக்கப்பட்ட நஷ்டஈடு ஒழுங்காக பிரித்துக் கொடுக்கப்படாததினால், இன்னமும் அந்தப் பிரச்சனை தீராமலே இருக்கிறது. இந்நிலையில், லிங்கா படத்தைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் கன்னடத்தில் ஒரு படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார்.
தமிழ், கன்னடம் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் உருவாகும் இந்த த்ரில்லர் படத்தில் நான் ஈ சுதீப் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஷாலினியின் தங்கை ஷாம்லியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
விரைவில் படப்பிடிப்புத் துவங்கவிருக்கும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
இந்தப் படத்தை தமிழில் யார் வெளியிட்டாலும் அந்தப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட முடியாத அளவுக்கு ரெட் கார்ட் போடுவது என லிங்கா விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் தீர்மானித்துள்ளனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், அதற்குள் லிங்கா விவகாரத்தை சுமுகமாக முடிக்க வேண்டும் என்று எண்ணுகிறாராம். அதற்காக சமீபத்தில் சென்னை வந்தவர் சில முக்கிய முடிவுகளை விரைவில் எடுப்பதாக கூறி சென்றிருக்கிறார். அதன்படி பிரச்சனை தீர்ந்தால் சரி. இல்லை என்றால் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் சுதீப் நடிக்கும் படத்தை தமிழில் வெளியிட முடியாமல் போகலாம்.