இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ஜெய், யாமி கவுதம், சந்தானம் நடித்துள்ள படம் தமிழ் செலவனும் தனியார் அஞ்சலும். பிரேம்சி இயக்கி உள்ளார். இந்தப் படத்தை கவுதம் மேனன் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். படத்தின் வேலைகள் முடிந்து ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்டது. சில பிரச்சினைகள் காரணமாக வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. தற்போது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு படம் வெளிவர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கவுதம் வாசுதேவ மேனனின் முன்னாள் நண்பரும், பங்குதாரருமான எல்ரெட் குமார் சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்துக்கு தடைகேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "நீதானே என் பொன்வசந்தம் படம் இயக்கி தயாரித்து தர கவுதம் வாசுதேவனுக்கு, ரூ. 13 கோடியே 27 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் திட்டமிட்டமிட்டபடி படத்தை எடுக்காமல் உள்ளூரிலேயே படத்தை முடித்துவிட்டு எங்கள் பணம் ரூ. 8 கோடியை கொண்டு சென்னை அடையாறில் வீடு வாங்கியுள்ளார். படமும் தோல்வி அடைந்து பெரும் நஷ்டத்தை அடைந்தேன். இதனால் எனக்கு வரவேண்டிய ரூ. 8 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.10 கோடியே 67 லட்சத்தை தந்த பிறகே தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தை வெளியிட வேண்டும். எனவே படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என்று தனது மனுவில் கூறியிருந்தார்.