ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தேசிய விருது பெற்ற காக்க முட்டை வசூலில் பொன்முட்டை இட்டுக் கொண்டிருக்கிறது. இயக்குனர் மணிகண்டன், ஐஸ்வர்யா ராஜேஷ், சிறுவர்கள் ராஜேஷ், விக்னேஷை தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ரூ.80 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம் உலக அளவில் ரூ. 25 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்கிறார்கள். படத்தை பார்த்தவர்களுக்கு ஒரே ஒரு குறை நடிப்பின் சிகரத்தை தொட்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேசுக்கு தேசிய விருது கிடைக்கவில்லையே என்பதுதான். ஆனால் ஐஸ்வர்யா அதுபற்றி கவலைப்படவில்லை.
அவர் கூறியதாவது: வெற்றி மாறன் சார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன், தனுஷ் சாருடன் நடிக்க ஆசைப்பட்டடேன். அவர்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது கதை கேட்டுவிட்டு விரும்பி நடித்தேன். இந்தப் படம் பேசப்படும், விருதுகளை -குவிக்கும் என்பது எனக்கு முன்பே தெரியும். ஆனால் தேசிய விருது கிடைக்கு-ம் வசூல் ரீதியாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்வதையே நான் விருதாக மதிக்கிறேன். சினிமாவில் நான் பயணப்படும் தூரம் நிறைய இருக்கிறது. அந்தப் பயணத்தில் எனக்கு விருதுகள் கிடைக்கும்.
இந்த மகத்தான வெற்றிக்கு ஊடகங்கள்தான் காரணம். எந்த ஸ்டார் வேல்யூவும் இல்லாத படத்தையும், அதில் நடித்த என்னையும் மக்களிடம் கொண்டு சேர்த்தது மீடியாக்கள்தான். அவர்களுக்கு நான் என்றும் நன்றியோடு இருப்பேன். என்கிறார் ஐஸ்வர்யா.