தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சந்தானம் முதன்முதலாக தயாரித்து 3 ஹீரோக்களில் ஒருவராக நடித்த படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. இந்தப்படம் தயாரிப்பில் இருந்தபோது ஒரு சர்ச்சை வெடித்தது. கே.பாக்யராஜின் இன்று போய் நாளை வா படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என கண்ணா லட்டு தின்ன ஆசையா பற்றி சர்ச்சை கிளம்பியது.
அதனைத் தொடர்ந்து கே.பாக்யராஜ் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். இந்நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்த இனிமே இப்படித்தான் படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தின் கதையும் தற்போது சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது.
அப்படி என்ன கதை? திருமண வயதை எட்டிய சந்தானத்திற்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். ஆனால் சந்தானத்தின் நண்பர்களோ, அவரை லவ் மேரேஜ் செய்யச் சொல்லி மனதை மாற்றுகிறார்கள். இதனால், ஆஸ்னா ஜாவேரியை ஒன்சைடாக லவ்வத் தொடங்குகிறார் சந்தானம். அதேநேரம் அகிலா கிஷோரை சந்தானத்திற்கு வீட்டில் பேசி முடிக்கிறார்கள். பலவித முயற்சிகளுக்குப்பிறகு சந்தானத்திடம், ஆஸ்னாவும் காதலைச் சொல்கிறார். இந்தப்பக்கம் அகிலாவுக்கும், சந்தானத்திற்கும் நிச்சயமும் நடக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு பெண்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் சந்தானம். இதுதான் 'இனிமே இப்படித்தான்' படத்தின் கதை.