ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த 2009ஆம் ஆண்டு மலையாளத்திலும் தமிழிலும் வெளியான வரலாற்றுப்படமான 'பழசிராஜா'விற்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் நாடறிந்தது.. மலையாள எழுத்தாளர்களின் பிதாமகனாக கருதப்படும் எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய கதையான 'பழசிராஜா'வை பிரபல டைரக்டர் ஹரிஹரன் இயக்கியிருந்தார். பழசிராஜவாக மம்முட்டி நடித்திருந்தார்.. இதைத்தொடர்ந்து எம்.டி.வாசுதேவ நாயர் 1984ல் எழுதி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'ரந்தமூழம்' என்கிற வரலாற்று நாவலையும் ஹரிஹரன் படமாக்கப்போவதாகவும் அதில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகின.
இதுநாள் வரை பல வருடங்களாகவே பேச்சுவார்த்தையிலேயே இருந்து வந்த இந்தப்படத்தை தாங்கள் தயாரிக்கப்போவதாக இப்போது ஹாலிவுட்காரர்கள் காசை இறக்கி தட்டிக்கொண்டு போய்விட்டார்கள். இந்தநிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது மோகன்லால் குறித்து பரபரப்பான சில தகவல்களை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஹரிஹரன். குறிப்பாக மோகன்லால் அதிக சம்பளம் கேட்டு தன்னுடைய படத்தில் நடிப்பதை புறக்கணித்தார் என பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார் ஹரிஹரன்..
1986ல் மோகன்லாலை வைத்து 'பஞ்சாக்னி' மற்றும் 1987ல் 'அம்ருதம் கமயா' என இரண்டு படங்களை இயக்கினார் ஹரிஹரன். இந்த இரண்டு படங்களுமே மோகன்லாலின் கேரியரை ஒருபடி மேலே உயர்த்திய வெற்றிப்படங்கள். அதிலும் பஞ்சாக்னி படத்தில் முதலில் நஸ்ருதீன் ஷா தான் நடிப்பதாகத்தான் இருந்ததாம். ஆனால் மோகன்லால் ஹரிஹரனிடம் தான் நடிக்க விரும்புவதாக ஆசையை வெளிப்படுத்த, மோகன்லாலை ஹீரோவாக்கினாராம் ஹரிஹரன்..
இந்த இரண்டு படங்களிலும் மோகன்லாலின் நடிப்பு ரொம்பவே பிடித்துப்போனதால், அதன்பின் ஒரு சில வருடங்கள் கழித்து இன்னொரு ஸ்கிரிப்ட்டுடன் மோகன்லாலை தேடிச்சென்றாராம் ஹரிஹரன். ஆனால் மோகன்லாலோ ஸ்கிரிப்ட்டை கேட்பத்தில் ஆர்வமே காட்டவில்லையாம். மேலும் அப்போது அவர் பெரிய ஸ்டாராக உருவெடுத்து இருந்ததால் ஒரு பெருந்தொகையை சம்பளமாக கேட்டாராம். அது அந்தப்படத்தின் பட்ஜெட்டுக்கு இணையாக இருந்ததாம்.