'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு |
நாசர் சினிமாவில் குப்பை பொறுக்குபவராக இதுவரை நடித்ததில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் குப்பை பொறுக்கிக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
நானும் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரமும் நெருங்கிய நண்பர்கள். சண்முகசுந்தரம் நல்ல ஓவியர். அதோடு அவருக்கு ஒரு பழக்கம் இருந்தது. அவர் குப்பையில் வீசப்பட்ட பொருள்களை பொறுக்கி எடுத்து வந்து அதில் விதவிதமான கலைப் பொருட்கள் செய்வார். அவருடன் பழகிய பிறகு எனக்கும் அந்த பழக்கம் தொற்றிக் கொண்டது. அது ஒரு போதை மாதிரி மனதுக்குள் வந்து விட்டது.
படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நானும், சண்முகவேலும் மோட்டர் சைக்கிளை எடுத்துக் கொண்டு, முகத்தில் கர்சிப்பை கட்டிக்கொண்டு வடபழனி, சாலிகிராமம், தொடங்கி கோயம்பேடு வரைக்கும் உள்ள குப்பை தொட்டிகளை கிளறி தேடுவோம். அதில் வித்தியாசமான பொருள் ஏதாவது கிடைத்தால் அதைக் கொண்டு வந்து கலைப் பொருட்கள் செய்வோம். அதுபோல நிறைய செய்து வைத்திருக்கிறோம். சென்னை ஏரியாவில் பைஜாமா, குர்தா போட்டு, முகத்தில் கர்சிப்கட்டி ஒருவன் குப்பையை கிளறிக்கொண்டிருந்தால் அது நான்தான் என்கிறார் நாசர்.