தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முன்னணி நட்சத்திரங்கள், முன்னணி இயக்குநர்களின் படங்களை பெரிய பட்ஜெட் படங்கள் என வகைப்படுத்தி இருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த வகையான படங்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த அதிரடி அறிவிப்பினால் முன்னணி நட்சத்திரங்களை வைத்தும் முன்னணி இயக்குநர்களை வைத்தும் படம் எடுத்த தயாரிப்பாளர்கள் சற்றே அதிர்ந்து போய் உள்ளனர். தங்களின் படங்களை வெளியிடுவதற்கு பொருத்தமான பண்டிகை தினங்களைத் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அஜித் நடித்துவரும் தல56 தீபாவளியை ரிசர்வ் செய்து வைக்க, விஜய் நடிக்கும் புலி வினாயகர் சதுர்த்தியை ரிசர்வ் செய்து வைத்துள்ளது. மற்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களும் பண்டிகையை தேடி வருகின்றன. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்ததன் அடிப்படையில், பெரிய படங்கள் வெளியிடுவற்கான பண்டிகை தினத்தில் சுதந்திர தினமும் அடக்கம். எனவே ஆகஸ்ட் 15 அன்று படங்களை வெளியிட கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ராஜேஷ் எம் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் நடித்திருக்கும் விஎஸ்ஓபி என்கிற 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டனர். இந்நிலையில் விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 10 எண்றதுக்குள்ள படத்தையும் ஆகஸ்ட் 15 அன்று வெளியிட உள்ளனர். இந்த விஷயத்தை ஃபாக்ஸ் ஸ்டார் பட நிறுவனத்தின் சிஇஓ விஜய்சிங் உறுதி செய்துள்ளார்.