அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
கடந்த சில வருடங்களாக வருடத்துக்கு சுமார் 250 படங்கள் வெளியாகின்றன. அவற்றில் எத்தனை படங்கள் வெற்றியடைந்தன என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பட எண்ணிக்கை அதிகரித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது. வாரத்துக்கு இரண்டு மூன்று நான்கு என ஏகப்பட்ட படங்கள் வெளியாவதால் புதிய தயாரிப்பாளர்களின் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது இல்லை. தொடர்ந்து படம் எடுக்கும் முன்னணி தயாரிப்பாளர்களுக்கும் அவர்கள் எதிர்பாரக்கிற தியேட்டர்கள் கிடைப்பதில்லை.
அதிக வசூலைத் தரும் தியேட்டரைக் கேட்டால், வசூல் வராத சின்ன தியேட்டர்களை ஒதுக்குகிறார்கள் என்று மல்ட்டிப்ளக்ஸ் மீது குற்றம்சாட்டுகின்றனர் தயாரிப்பாளர்கள். கொம்பன் படத்தை வெளியிட்டபோது சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் நிர்வாகத்துக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் பிரச்சனையே ஏற்பட்டது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் தியேட்டர்களை லீசுக்கு எடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் ஞானவேல்ராஜா.
அதன்பிறகு, வாரத்துக்கு ஒரு படத்தை ரிலீஸ் செய்வது என்றும் மிகப்பெரிய திட்டம் வைத்திருக்கிறாராம். தான் தயாரிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் தரமான படங்களையும் தன்னுடைய பேனரில் வெளியிட உள்ளார். ஞானவேல்ராஜாவின் இந்த முயற்சி வெற்றியடைந்தால் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படும் என்று கருத்து தெரிவிக்கின்றனர் திரைப்பட விநியோகஸ்தர்கள்.