டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
முப்பது வயதை கடந்துவிட்ட நயன்தாரா இப்போதும் மார்க்கெட்டில் நம்பர்-ஒன் குதிரையாக ஓடிக்கொண்டிருக்கிறார். அதோடு, இளவட்ட நடிகர்கள், மேல்தட்டு நடிகர்கள் என்கிற பாரபட்சம் பார்க்காமல் அவர் நடித்து வருவதால், அனைவருக்குமே பிடித்தமான நடிகையாகவும் திகழ்கிறார். ஆனால், சமீபகாலமாக ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால், சரியாக அவரால் ஓய்வெடுக்கவே முடிவதில்லையாம். தூக்கம் குறைவதால் அவரது முகத்தில் பொலிவும் குறைந்து வருகிறது. குறிப்பாக, நயன்தாராவை புதிதாக பார்ப்பவர்கள், என்ன நயன்தாரா இப்படியிருக்கிறார் என்று அதிருப்தியாகும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த சேதி நயன்தாராவுக்கும் தெரிந்து விட்டது. முதல் இன்னிங்சில் இருந்தபோது அடிக்கடி கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை செய்து வந்த நயன்தாரா, சமீபகாலமாக அதை ஓரங்கட்டி வைத்திருந்தார். ஆனால் இப்போது தனது அழகு குறித்த விமர்சனங்கள் எழுந்திருப்பதால், மீண்டும் அழகு சிகிச்சைகளில் இறங்கி தன்னை மேருகேற்றிக்கொள்ள தயாராகிக்கொண்டிருக்கிறாராம் நயன்தாரா.