டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில், பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் அதிகமாக பகிரப்படுகின்றன. சமூக வலைதளங்களில், பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாமல் ஆபாசமான படங்கள் வீடியோக்கள் கருத்துக்கள் பகிரப்படுவது அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.
இப்படியானதொரு அசாதாரண சூழ்நிலையில், நடிகை விசாகா சிங் பாராட்டத்தக்க காரியம் ஒன்றைச் செய்திருக்கிறார். அவரது செயல் அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டிருக்கிறது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் நாயகியான விசாகா சிங், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
நடிகை விசாகா சிங்கின் புகைப்படம் பகிரப்பட்ட சில நிமிடங்களில், அதன் கமென்ட் பகுதியில் வக்கிரமான வார்த்தைகளைப் பதிவிட்டார் ரசிகர் ஒருவர். ஃபேஸ்புக்கில் எல்லா நடிகைகளும், பெண்களும் இப்படிப்பட்ட மோசமான கமெண்ட்களை சந்தித்து வருகின்றனர். விசாகா சிங் மற்றவர்களைப்போல் கடந்து செல்லாமல், வக்கிரபுத்தி படைத்த அந்த ரசிகருக்கு தன் கருத்துக்கள் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அவரின் இந்த தைரியமான செயலை அனைவரும் பாராட்டித் தள்ளியுள்ளனர். இதுபோன்ற வக்கிரபுத்தி படைத்த ஆண்களிடம் ஒரு பெண் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதற்கு விசாகாவின் செயலே உதாரணம் என்றும் புகழ்ந்துள்ளனர். இது எல்லாவற்றையும்விட முக்கியமான மற்றொரு விஷயமும் நடந்துள்ளது. அதாவது, ஃபேஸ்புக்கில் விசாகாவின் அதிரடி நடவடிக்கை குறித்த செய்தி இந்திய அளவில் டிரென்ட் ஆகிவிட்டது.