ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெங்கட்பிரபு இயக்கத்தி்ல், சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள மாசு என்கிற மாசிலாமணி படம் குறித்த விமர்சனங்களால் அதிர்ச்சியடைந்துள்ள இயக்குநர் வெங்கட்பிரபு, எதற்கும் ஒரு எல்லை உண்டு என முரட்டுத்தனமாக எச்சரித்துள்ளார்.
மாசு என்கிற மாசிலாமணி படத்திற்கு இருவகையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. படத்திற்கு விமர்சனம் செய்வது என்ற நிலையிலிருந்து ஒருபடிமேல் சென்று, விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள், சூர்யா ரசிகர்களை வம்பிழுக்கும் வகையில் டுவிட்டரில் டிரெண்டிங்களை உருவாக்கி மோதலை உருவாக்கி வருகின்றனர்.
இதுகுறித்து, இயக்குநர் வெங்கட்பிரபு கூறியிருப்பதாவது, சினிமா ஒரு பொழுதுபோக்கு மீடியம், இதை மகிழ்ச்சியாக பாருங்கள். ஏதாவது குறை இருந்தால், தாராளமாக கூறுங்கள், அதை நாங்கள் சரி செய்து கொள்கிறோம். அதை விடுத்து, ரசிகர்களுக்கிடையே விரும்பத்தகாத வார்த்தைகளை வெளியிட்டு ஒரு கசப்புணர்வை வெளியிட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை, ரசிகர்கள் தவிர்க்கவேண்டும். இதேநிலை தொடருமானால், கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும். எதற்கும் ஒரு எல்லை உண்டு என்று வெங்கட்பிரபு கூறியுள்ளார்.