ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெட்டிக்கடைகளில் கூட சிறுத்தை படத்தின் திருட்டு டிவிடி கிடைப்பதாக போலீசாரிடம் நடிகர் கார்த்தி புகார் அளித்துள்ளார். நடிகர் கார்த்தி, தமன்னா, சந்தானம் நடித்த சிறுத்தை படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வந்தது. வழக்கம்போலவே படம் ரீலிஸ் ஆன நாளிலேயே அதன் திருட்டு டி.வி.டி.,க்களும் வெளியாகிவிட்டன. இதுகுறித்து புகார் அளிப்பதற்காக நடிகர் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்தனர். அதன் பின்னர் நிருபர்களுக்கு கார்த்தி அளித்த பேட்டியில், சிறுத்தை படம் வெளியாகி 4 நாட்கள் கூட ஆகவில்லை. தற்போது அதன் திருட்டி டி.வி.டி.களை வெளியிட்டுள்ளனர். கல்லூரி வாசல், கோயில் வாசல் என எல்லா இடங்களிலும் இந்த டி.வி.டி.கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன் ஆதாரமாக நாங்களும் அந்த டி.வி.டி.களை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறோம். மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை சிறுத்தை பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்தப்படத்தை ரசிக்கின்றனர். இந்த நேரத்தில் தியேட்டரில் திருட்டுத்தனமாக படம் பிடித்து அதை சி.டி.யாக்கி வெளியே விற்கின்றனர். இணைய தளத்திலும் வெளியிட்டுவிட்டனர், என்றார்.
திருட்டி டி.வி.டி. விவகாரம் சினிமா துறையில் பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளதாக குறிப்பிட்ட கார்த்தி, எதையாவது செய்து அந்த குற்றத்தை ஒழிக்க வேண்டும். என்றும் பெட்டிக்கடைகளில் கூட சகஜமாக திருட்டு டி.வி.டி., கிடைப்பது பற்றி கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.