தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனை 'மெரினா' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ். இப்படத்தைத் தொடர்ந்து மனம் கொத்திப் பறவை படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக புக் பண்ணினார் இயக்குநர் எழில். பாண்டிராஜ், எழில் இருவரும் சிவகார்த்திகேயனை ஹீரோவாக நடிக்க வைத்த பிறகு, 3 படத்தில் அவருக்கு காமெடியன் வேடம் கொடுத்தார் தனுஷ். அப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த வரவேற்பை கணித்து பிறகு அவரை எதிர்நீச்சல் படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார் தனுஷ்.
தன்னை முதலில் ஹீரோவாக்கிய பாண்டிராஜ், எழில் இருவரையும் மறந்துவிட்டு, சந்தானம் டேட் கிடைக்காததினால் 3 படத்தில் காமெடியாக நடிக்க வைத்த தனுஷுக்கு சிவகார்த்திகேயன் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று அவர் மீது திரையுலகில் விமர்சனம் உண்டு. பாண்டிராஜே தனக்கு நெருக்கமானவர்களிடம் இது பற்றி குறைபட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த 'காக்கி சட்டை' படம் நேற்று 100 ஆவது நாட்களைத் தொட்டிருக்கிறது. 'காக்கி சட்டை' நூறாவது நாளைத் தொட்ட அதே நாள்தான் (ஜூன் 7) இயக்குனர் பாண்டிராஜின் பிறந்தநாள். இதை தெரிந்து கொண்டு, காக்கி சட்டை படத்தின் வெற்றியை இயக்குநர் பாண்டிராஜுக்கு சமர்ப்பித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். பாண்டிராஜும் பதிலுக்கு, நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து வெற்றிபெற சிவாவை வாழ்த்திருக்கிறார்.