இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தில் பூம் பூம் ரோபோ டா, இரும்பிலே ஒரு இதயம் முளைத்ததோ, கோ படத்தில் என்னமோ ஏதோ போன்ற பாடல்களின் ஹிட்டுக்கு பிறகு பிசியான பாடலாசிரியராகி விட்டார் மதன்கார்க்கி. அதேபோல் லிங்காவில் அவர் எழுதிய மேனா கேசோலினா பாடலும் சூப்பர் ஹிட்டானது. இப்படி பாடல்களில் ஒருபக்கம் பிசியாக இருக்கும் மதன்கார்க்கி, முதன்முறையாக எந்திரன் படத்திற்கு வசனம் எழுதினார். அதைத் தொடர்ந்து குட்டிச்சாத்தான், நண்பன், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வை ராஜா வை, மாஸ் ஆகிய படங்களுக்கும் பாடல் எழுதியவர். தற்போது தமிழ், தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் பாகுபலி படத்தின் தமிழ்ப்பதிப்பிற்கும் வசனம் எழுதியிருக்கிறார்.
அதோடு, பாகுபலி சரித்திர காலத்து படம் என்பதால், தற்கால தமிழ் மட்டுமின்றி, சங்கத்தமிழ் வார்த்தைகளிலும் வசனம் எழுதியுள்ளாராம். அந்தவகையில், இந்த படத்துக்காக கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவ்வப்போது வசனம் எழுதி வந்த மதன்கார்க்கி, இந்த படத்தின் வசனங்களை நடிகர் நடிகைகள் அனைவருமே மனப்பாடம் செய்து கொண்டு நடித்ததாக சொல்கிறார்.