ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷனும், தீபிகா படுகோனேவும். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. தூம் படங்கள் தொடர்ச்சியாக மூன்று பாகங்கள் வரை வந்தது. அதேப்போன்று படங்களை எடுக்க யாஸ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதனால் இப்படத்தில் ஹிருத்திக் ரோஷனை நடிக்க வைக்க எண்ணியுள்ளது. மேலும் ஹிருத்திக் ஜோடியாக தீபிகாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்தது வருகிறது. இதுதொடர்பாக அவரிடமும் பேசி வருகின்றனர். தீபிகாவுக்கும் இந்தபடத்தில் நடிக்க ஆசை தானாம். ஆனால் இன்னும் உறுதி செய்யவில்லை, அதேசமயம் தற்போது தீபிகா, தமாஷா படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை, அதனால் நிச்சயம் இந்தப்படத்தில் நடிப்பார் என்கிறார்கள். ஆக்ஷ்ன் பிலிம்மாக உருவாக இருக்கும் இப்படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்க இருக்கிறார்.