பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
நானும் ரவுடிதான் படத்தில் மன்சூரலிகான் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிக்கும் படத்திற்கு பெப்சி ஒத்துழைப்பு தருவதில்லை என்று முடிவு செய்திருக்கிறது.
இது குறித்து மன்சூரலிகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: மன்சூர் அலிகான் நடிக்க கூடாதுன்னு சொல்ல யாருக்கு என்ன உரிமை இருக்கு. அது தயாரிப்பாளர், டைரக்டர் செய்ய வேண்டிய வேலை. எத்தனையோ பிரச்சனையை நான் சமாளித்துக்கொண்டு வருகிறேன் ஆனால் இவர்கள் டாப்சியை (மன்சூரலிகான் ஆரம்பித்துள்ள அமைப்பு) நசுக்க நினைத்து இப்படி செய்திருக்கிறார்கள். எந்த தயாரிப்பாளருக்கும் நான் பிரச்சனையாக இருக்க விரும்பவில்லை. ஒரு தயாரிப்பாளர் என்னை வைத்து படம் எடுக்கிறதே அதிசயம். ஆனா இவங்க சூட்டிங்க கேன்சல் பண்றாங்க. இவங்களுக்கு சூட்டிங்க கேன்சல் பண்ண என்ன உரிமை இருக்கு இதுக்குதான் இப்போ நான் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றிருக்கிறேன்.
பெப்சி தொழிலாளிகளுடன் எனக்கு எந்த வித மாறுபட்ட பேதம் கிடையாது. டாப்சி வந்து ஏழைகளுக்கான, தயாரிப்பாளர்களுக்கான ஒரு இயக்கம். எனக்கு தெரிஞ்ச கலையை கற்று கொடுத்து நான் நடிகர், நடிகைகள், சண்டை மற்றும் நடன கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறேன்.