பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மிமிக்ரி கலைஞனாக வாழ்க்கையை தொடங்கி சின்னத்திரையில் திறமை காட்டி, எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவில் காமெடியான ஜெயித்து ஹீரோவாகி இருப்பவர் சந்தானம். உடல்மொழியால் காமெடி செய்தவர்கள் மத்தியில் டைமிங் டயலாக் மூலம் தனக்கென தனி காமெடி பாதை வகுத்துக் கொண்டவர். அவர் நடிப்பில் அடுத்து வர இருக்கிறது இனிமே இப்படித்தான். தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழாக்களுக்குகூட வராமல் பிசியாக இருக்கும் சந்தானம். தன் பட புரமோஷனுக்காக மீடியாக்களை தானே அழைத்து பேசினார். அவர் நம்மோடு பேசியதிலிருந்து...
மீடியாக்களை சந்திப்பதை தவிர்க்கிறீர்களே ஏன்?
அப்படி நீங்கதான் பாஸ் நினைக்கிறீங்க. இன்னிக்கு நான் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கேன்னா அதுக்கு மீடியாக்கள்தான் காரணம். அடுத்தடுத்து படங்கள், கமிட்மெண்டுன்னு ஓடிக்கிட்டே இருக்கேன். ரெண்டாவது நான் காமெடியன்தான் படத்தை பற்றி நான் பெருசா சொல்ல என்ன இருக்கும். இனிமே இப்படித்தான் நான் ஹீரோவா நடிக்கிற படம். நானே தயாரிக்கிற படம் சொல்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு பேசுறேன். அப்படியிருந்தும் எனது பேட்டிகள் வந்துகிட்டுதான் இருக்கு. ஹீரோவா நடிச்சா டைரக்டர் சொல்றது கேட்டு நடிச்சிட்டு போயிடலாம். காமெடியனா நடிக்கிறபோது டயலாக்லேருந்து, சீன் வரைக்கும் யோசிக்க வேண்டியது இருக்கிறது. மக்களுக்கு கொஞ்சம் போரடிச்சாக்கூட தூக்கி வெளியில போட்டுவிடுவாங்க. அதனால் நிறைய யோசிக்க வேண்டியது இருக்கிறது. மீடியாக்களோடு பேசிக் கொண்டிருந்தால் இது ரொம்ப பாதிக்கும்-. இதை மீடியா பிரண்ட்ஸ் புரிஞ்சிக்கணும்.
காமெடியன்கள் ஹீரோயினாவது காலத்தின் கட்டாயமா?
கட்டாயமும் கிடையாது, கஷாயமும் கிடையாது. ஹீரோவுக்கு நண்பராகவே நிறைய நடித்து விட்டேன். எனக்கே போரடித்து விட்டது. அதான் ஹீரோவாகிடலாமுன்னு முடிவு பண்ணினேன். அதுக்கா அஜித், விஜய் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணிக்கல. என்னோட எல்லை என்னவோ அதுலதான் நிக்கிறேன். அதுக்காக இனி ஹீரோவாத்தான் நடிப்பேன்னு கிளப்பிடாதீங்க. காமெடிக்குத்தான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன். கிடைக்கிற கேப்புல ஹீரோவா நடிச்சுக்குவேன்.
நாகேஷ், சந்திரபாபு, என்.எஸ்.கிருஷ்ணன்கூட ஹீரோவா நடிச்சிருக்காங்க. ஆனா அவங்க படத்துல ஒரு மெசேஜ் இருக்குமே?.
அவங்கெல்லாம் ஜீனியஸ். அவங்களோட என்னை ஒப்பிடறதே தப்பு. இனிமே இப்படித்தான் படத்துல கடைசியா ஒரு மெசேஜ் இருக்கும். இனிமே நான் நடிக்கிற படத்துல கண்டிப்பா ஒரு மெசேஜ் இருக்கும். மற்றபடி நீங்க சொல்ற ஜீனியஸோட படங்களை பார்த்து ரசிக்கலாமே தவிர அவங்க இடத்தை நிரப்பவே முடியாது.
காமெடியில் யாரை ரோல் மாடலா வச்சிருக்கீங்க?
ரோல் மாடல்னு யாரும் கிடையாது. எங்கப்பாகூட நிறைய எம்.ஜி.ஆர் படம் பார்த்திருக்கிறேன். அதுல தங்கவேலு சார் செய்யுற டைமிங் காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும், சமயத்துல ஹீரோவையே கலாய்த்து விடுவார். அவருக்கு பிறகு கவுண்டமணி சாரின் காமெடி ரொம்ப பிடிக்கும். அதானல் இவர்கள் சாயல் என் காமெடியில் இருக்கும்.
காமெடி நடிகர்களின் சம்பளமும் கணிசமாக உயர்ந்திருக்கே?
மற்றவங்களை பற்றி எனக்குத் தெரியாது. நான் எப்போதுமே சம்பளத்தை பெருசா நினைக்கிறவன் இல்லை. நட்பைத்தான் பெருசா நினைக்கிறவன். எத்தனையோ படத்துக்கு சம்பளம் வாங்காமலேயே நடிச்சிருக்கேன். அதையெல்லாம் வெளியில சொல்லி விளம்பரப்படுத்திக்கவா முடியும். என்னை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள் அடுத்தும் என்னை வைத்து படம் எடுக்க விரும்புகிறார்கள். இதிலிருந்தே என்னை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
நீங்களும் கிசுகிசுவில் சிக்கி விட்டீர்களே?
மீடியாக்கள் இப்போது அதிகம். அவர்களுக்கும் நிறைய செய்தி வேண்டும். போட்டி உலகத்தில் எங்களுக்கும் நிறைய பப்ளிசிட்டி வேண்டும். அதனால் இதையெல்லாம் தவிர்க்க முடியாது. அடுத்தடுத்து இரண்டு படத்தில் சேர்ந்து நடிக்கிறதால ஆஸ்னா ஜவேரியுடன் காதல்னு கிசுகிசு வந்துச்சு. இதெல்லாம் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்துலேருந்தே வந்திக்கிட்டிருக்கு. என் மனைவி என்னை விட்டு பிரிஞ்சுட்டாங்கன்னு ஒரு பத்திரிகை போஸ்டர்ல போட்டிருந்தாங்க. நானும் என் மனைவியும் சாய்பாபா கோவிலுக்கு போய்ட்டு வெளியில வந்தபோது அந்த போஸ்டரை பார்த்தோம். சிரிச்சிக்கிட்டோம். அவ்ளோதான் அதை அப்படியே விட்டுடணும்.
ஏன் தெலுங்கு, மலையாளத்தில் நடிப்பதில்லை?
உள்ளூர்ல ஓணாம் பிடிக்க முடியாதவன் வெளியூர்ல போயி ஒட்டகம் பிடித்தானாம்னு எங்க ஊர் பக்கம் பழமொழி சொல்வாங்க. தமிழ்நாட்டு ஜனங்களையை இன்னும் முழுசா சிரிக்க வைக்க முடியல. இதுல அடுத்த மொழிக்கு எங்கே போறது. அதோடு ஹீரோயிசத்தை எந்த மொழியிலேயும் காட்டிடலாம். ஆனால் காமெடிக்கு கொஞ்சம் நேட்டிவிட்டி வேணும். அப்பதான் ஜனங்க சிரிப்பாங்க.
தொடர்ந்து படம் தயாரிப்பீர்களா?