டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவை அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன் பாடல்களால் தாலாட்டிக் கொண்டிருக்கும் பாடும் குயில் எஸ்.பி.பாலசுப்பிரணியத்துக்கு இன்னு (ஜுன் 4) 69 வது பிறந்த நாள். அவரின் சாதனை படிக்கட்டுகளில் சில இங்கே...
* என்ஜினீயராக வேண்டும் என்று விரும்பிய எஸ்.பி.பாலசுப்பிரணியத்துக்கு, என்ஜினீயரிங் கல்லூரியில் சீட் கிடைக்காததால் பாடகர் ஆனார். 1966ல் இசை அமைப்பாளர் கோதண்டபாணி பாடகராக அறிமுகப்படுத்தினார். அவர் நினைவாக தான் கட்டிய ஸ்டூடியோவுக்கு கோதண்டபாணி ஸ்டூடியோ என்று பெயர் வைத்தார். தமிழில் முதல் படம் சாந்தி நிலையம்.
* சில நூறுகள் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த எஸ்.பி.பி.யை சில ஆயிரம் சம்பளம் வாங்க வைத்த பாடல் "ஆயிரம் நிலவே வா..." அடிமைப் பெண் படத்தில் இடம் பெற்றது.
* முறைப்படி சங்கீதம் கற்காத எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசை பாடி உலக புகழ் பெற்றார்.
* தெலுங்கு தாய் மொழி. ஆனால் இவர் பாடியதோ 25 மொழிகளில். அந்தந்த மொழிக்குரிய தனி உச்சரிப்போடு பாடுவது இவரின் சிறப்பு.
* உலகிலேயே 50 ஆயிரம் பாடல்கள் பாடிய ஒரே பாடகர் இவர் ஒருவரே. கின்னஸ் சாதனையிலும் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது. அதிகம் பாடியது தமிழில், அடுத்து தாய்மொழி தெலுங்கில்.
* 6 தேசிய விருதுகள், 25 ஆந்திர மாநில விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள் 50க்கும் மேற்பட்ட தனி அமைப்பு விருதுகள், இரண்டு டாக்டர் பட்டங்கள் இவர் சாதனையை அலங்கரிக்கின்றன.
* டி.எம்.சவுந்தராஜன் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு தனித்தனி குரலில் பாடுவது போல இவர் கமல், ரஜினிக்கு தனித்தனி குரலில் பாடுவார்.
*1981ம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு ரிக்கார்டிங் தியேட்டரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையான 12 மணிநேரத்தில் 21 கன்னட பாடல்களை பாடி சாதனை படைத்தார். அத்தனை பாடல்களும் ஹிட்டானது. தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும், இந்தியில் ஒரே நாளில் 16 பாடல்களையும் பாடி சாதனை படைத்தார்.
*தன் கனத்த சரீசரத்துடன் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
*45 படங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
*அரை நூற்றாண்டுகள், 5 தலைமுறைகள் கடந்தும் எஸ்.பி.பியின் இசைப் பணயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அண்டார்டிகா பனிப்பிரசேதம் தவிர அத்தனை நாடுகளிலும் இவரின் கானக்குரல் ஒலித்திருக்கிறது.
தொடரட்டும் எஸ்.பி.பி.யின் சாதனை. பிறந்த நாள் வாழ்த்துக்கள்!