தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2007-2008ம் ஆண்டிற்கான சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது தமிழக சட்டசபையில் 7.5.2009 அன்று நடைபெற்ற விவாதத்தின்போது தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி போன்ற விருதுகள் வழங்கப்படுவதுபோல, அகில இந்திய அளவில் புகழ்பெற்ற கலைஞர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் விருதுகள் வழங்கப்படுமெனத் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் முகமாகத்தான், இயல் துறையில் சிறந்து விளக்கும் ஒருவருக்கு பாரதி விருது, இசைத் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது, நாட்டியக் கலையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு பாலசரசுவதி விருது என மூன்று விருதுகளை ஆண்டு தோறும் வழங்கிட முதல்வர் கருணாநிதி ஏற்கனவே ஆணையிட்டிருந்தார்.
அந்த ஆணையின்படி முதல் முறையாக இந்த ஆண்டில், இயல்துறையில் சிறந்த எழுத்தாளராகிய த.ஜெயகாந்தனுக்கு பாரதி விருது வழங்கிடவும், திரை இசைக் கலையில் தனி முத்திரை பதித்துள்ள இளையராஜாவுளுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கிடவும், நாட்டிய கலையில் புகழுடன் திகழும் டாக்டர் பத்மா சுப்பிரமணியத்துக்கு பாலசரசுவதி விருது வழங்கிடவும், இந்த விருதுகளைப் பெறும் பெருமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் விருதுக்குரிய பொற்கிழியாக வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.