இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சதா. ஜெயம், வர்ணஜாலம், அந்நியன், உன்னாலே உன்னாலே போன்ற படங்களில் நடித்துள்ள சதா த்ரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகளுக்கு இணையாக வலம் வந்தவர் திடீரென்று மாயமானார்.
தமிழில் போதிய படவாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு “புலிவேஷம்” படம் மூலம் மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரியாகியுள்ளார்.
தமிழில் மீண்டும் நடிப்பது குறித்து சதா கூறுகையில், "இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக இருந்ததால் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. நல்ல கதைகள் வந்தால் தமிழில் நடிக்கலாம் என்று தான் இருந்தேன். நிறைய இயக்குநர்கள் என்னை அணுகி கால்ஷீட் கேட்டனர். ஆனால் அவர்கள் சொன்ன கதைகள் எனக்கு பிடிக்க வில்லை. பிறகு டைரக்டர் பி. வாசு அவர்கள் சொன்ன “புலிவேஷம்” கதை ரொம்ப பிடித்து போனது. என்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் இந்த கதை அமைந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்" என்கிறார்.