இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
இன்றைய இயந்திர தனமான வாழ்க்கையில் மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் முற்றிலுமாக மாறி போய்விட்டது. ஆரோக்கியமான உணவுவகைகளை சாப்பிட்ட காலம் போய், ஏதோ வயிறு நெறஞ்சா போதும் என்று சாப்பிடும் காலம் வந்துவிட்டது. மக்களுக்கு உணவுமுறை குறித்த பழக்கங்களை ஏற்படுத்தும் விதமாக மக்கள் டி.வி.யில் சமையல் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது. தினமும் பகல் 1.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், தமிழர்களின் மறந்துபோன உணவு வகைகள் முதல் இக்கால அவசர உணவு வரை பல்வேறு விதமான சமையல்கள் செய்து காண்பிக்கப்படுகிறது.
திங்கள் அன்று கைமணம் என்ற பெயரில் தமிழர்களின் மறந்து போன உணவு வகைகளையும், செவ்வாய் அன்று அவசர சமையல் என்ற பெயரில் அவசர உணவு வகைகளையும், புதன் அன்று நட்சத்திர சமையல் என்ற பெயரில் பிரபலங்கள் சமைக்கும் உணவு வகைகளையும், வியாழன் அன்று பன்னாட்டு சமையல் என்ற பெயரில் அயல்நாட்டு உணவு வகைகளையும், வெள்ளியன்று பசுமைசமையல் என்ற பெயரில் இயற்கை உணவு வகைகளையும், சனியன்று சுவைப்பயணம் என்ற பெயரில் ஒவ்வொரு பகுதியினரின் சிறப்பு உணவுவகைகளையும், ஞாயிறு அன்று சத்தான சமையல் என்ற பெயரில் சத்தான உணவு வகைகளையும் செய்து காண்பிக்கின்றனர்.