தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் புலி. பேண்டஸி படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சிம்புதேவன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துவங்கியுள்ளன.
இந்நிலையில் இப்படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது வௌியாகியுள்ளது. அதாவது, புலி படத்தில் பெரிதும் பேசப்படபோவது கிளைமாக்ஸ் காட்சி தானாம். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய், சுமார் 1000 பேருடன் சண்டை போடுகிறாராம். இந்த பிரமாண்ட சண்டைக்காட்சியை பிரபல ஹாலிவுட் இயக்குநர் சாங் லீன், சுமார் 70 நாட்கள் படமாக்கியிருக்கிறாராம். படம் வௌியாகும் போது இந்த சண்டைக்காட்சி பெரிதும் பேசப்படும் என்கிறார்கள்.
புலி படத்தை விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் செய்ய உள்ளனர். முன்னதாக வருகிற ஜூன் 22ம் தேதி, விஜய்யின் பிறந்தநாளில் புலி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வௌியிட இருக்கிறார்கள்.