டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மேரிகோம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் தில் தடக்னே டூ. இந்த படத்தில், தனது கேரக்டர் மற்றும் படப்பிடிப்பில் நிகழ்ந்த அனுபவங்கள் குறித்து நம்முடன் பிரியங்கா சோப்ரா பகிர்ந்துகொள்கிறார்.
தில் தடக்னே டூ படத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
தில் தடக்னே டூ படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் நடிக்க பிடிக்கவில்லை என்று யாராலும் சொல்ல முடியாது அப்பேற்பட்ட கதை. படத்தின் இயக்குநர் ஜோயா அக்தரும் எனது சிறந்த நண்பர். அவர் எனது நண்பர் மட்டுமல்லாது திறமையான இயக்குநரும் கூட. அவருடன் இணைந்து படம் பண்ண பல நாட்களாக காத்திருந்தேன். இந்த வாய்ப்பு வந்தவுடனே, உடனடியாக ஓ.கே. சொல்லிவிட்டேன். படத்தின் ரிலீசை வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
படத்தில் உங்களது கேரக்டர் குறித்து...
தில் தடக்னே டூ படத்தில், நான் ஆயிஷா என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். ஆயிஷா பெண் தொழிலதிபர், தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று நினைப்பவள். கணவர் ராகுல்போஸ் உடன் இணக்கமாக இருக்கும் ஆயிஷா, ஆண் நண்பர் பர்ஹான் அக்தருடன் உறவை பேணிவருகிறார். ஆயிஷாவின் சகோதரர் ரன்வீர் சிங். அவரின் அப்பா அனில் கபூர். மொத்தத்தில் சொல்லப்போனால், இது ஒரு குடும்ப உறவை விளக்கும் படம்...
படம் குறித்து...
ஒரு சாதாராண மனிதனின் குடும்ப வாழ்க்கையே இந்த படம். ஒரு குடும்பத்தலைவரின் தொழிலை, அடுத்து மகன் தான் பார்க்கவேண்டுமே தவிர, மகள் அல்ல என்பதையே, இந்த சமூகம் தொடர்ந்து நினைத்து வருகிறது. இந்நிலையில், அப்பாவின் தொழிலை, மகள் செய்ய விரும்புகிறாள், ஆனால், அவளிடம் தர அப்பா மறுக்கிறார். தொழிலில் சிறிதும் விருப்பமே இல்லாத மகனிடம் ஒப்படைக்கவே தந்தை விரும்புகிறார். இது படத்தின் ஒருவரிக்கதை.
இந்த படத்தில் தவறுக்கு எதிராக குரல் கொடுக்கிறீர்கள்...நிஜவாழ்க்கையிலும் அப்படித்தானே?
உண்மைதான். இந்த படத்தில் தவறுக்கு எதிராக குரல் கொடுக்கும் கேரக்டரில் நடித்துள்ளேன். நிஜவாழ்க்கையிலும் நான் அப்படித்தான்...இந்த மனோநிலையை, நான் எனது பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்டேன். எனக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ அதை நான் சத்தம் போட்டே சொல்லுவேன். அதேபோல, தவறு என்று பட்டாலும் அதை வெளியில் சொல்ல தயங்கமாட்டேன்.
குடும்பத்தின் ஆதரவு இன்றி வெற்றி சாத்தியமா?
நிச்சயமாக இல்லை. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இன்றி, நாம் வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும் வெற்றியை ருசிக்க முடியாது. நான் திரைத்துறையில் நுழைய முயற்சித்தபோது எனது மாமா தடைவிதித்தார். ஆனால், எனது அப்பா ஆதரவுக்கரம் நீட்டியதாலேயே என்னால், தற்போது இந்த நிலைக்கு உயரமுடிந்துள்ளது.
பெண்களை மையப்படுத்தும் படங்கள் தான் உங்களுக்கு பிடிக்குமோ?
ஆமாம். பெண்களை மையப்படுத்தும் படங்களை நான் விரும்பி பார்ப்பேன். ஆண்டிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இந்த வகையிலான படங்களிலாவது நடிக்க விரும்புகிறேன். இந்தவகையான படங்கள், எனது நடிப்புத்திறமையை மேம்படுத்துவதாக கருதுகிறேன். நான் நடித்து வெளியான பேஷன், மேரிகோம், பார்பி...உள்ளிட்ட படங்கள், பெண்களை மையப்படுத்திய படங்களே ஆகும். இந்த வகையிலான படங்களுக்கு, மக்களும் பெருமளவு ஆதரவளித்து வருகிறார்கள் என்று பிரியங்கா சோப்ரா கூறினார்.