ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டைரக்டர் கே.பாக்யராஜிடத்தில் உதவியாளராக பணியாற்றியவர் பாண்டியராஜன். அந்த சமயத்தில் பாக்யராஜ் இயக்கும் படங்களைப் பார்க்க எம்ஜிஆர் செல்வதுண்டு. அப்போது அவருடன் நின்று ஒரேயொரு போட்டோ எடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் ஆசைப்படுவாராம் பாண்டியராஜன். ஆனால் அந்த நேரம்பார்த்து அவருக்கு ஏதாவது வேலை கொடுத்து அனுப்பி விடுவாராம் பாக்யராஜ்.
இருப்பினும், ஒருமுறை, பாக்யராஜின் படத்தை பிரிவியூ தியேட்டரில் எம்ஜிஆர் பார்த்து விட்டு வெளியேவந்தபோது, நான்தான் இந்த படத்தோடு அசோசியேட் டைரக்டர் என்று பாண்டியராஜன் சொன்னதை அடுத்து, எம்ஜிஆருடன் நின்று போட்டோ எடுக்கும் வாய்ப்பினை பெற்றாராம். ஆனால் அப்படி ஆசை ஆசையாக எடுத்துக்கொண்ட போட்டோவை அவர் தனது வீட்டில் வைத்திருந்தபோது வீட்டுக்கு வந்தவர்கள் யாரோ திருடிச்சென்று விட்டார்களாம். இதனால் கண்கலங்கினாராம் பாண்டியராஜன்.