தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் உருவாகி பெங்கலன்று திரைக்கு வந்த இளைஞன் படத்தினை தயாரித்த மார்ட்டின் மீது வழக்கு பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாயகனாக பா.விஜய்யும், நாயகியாக ரம்யா நம்பிஸனும் நடித்துள்ள இளைஞன் படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிப்பாளர் மார்ட்டின் தயாரித்தார். இந்த படத்திற்கு முதல்வர் கருணாநிதிதான் கதை, வசனம் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் மார்ட்டின் பிரபல லாட்டரி அதிபர். இவர் மீது ஏற்கனவே சிலபல மோசடி வழக்குகள் விசாரணையில் உள்ளன.
இந்நிலையில் சேலத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ரூ. 49 லட்சம் மதிப்புள்ள தனது சொத்தை லாட்டரி அதிபர் மார்ட்டின், மோசடியாக சிலருக்கு விற்று விட்டதாகவும், இதை தட்டிக் கேட்ட தன்னை பயங்கர ஆயுதங்களால் மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தனது மனைவி, சேலம் நகர போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். புகாரை போலீசார் பதிவு செய்யவில்லை. டி.ஜி.பி.,யிடம் புகார் அளித்தேன்.அரசியல் செல்வாக்கு மார்ட்டினுக்கு உள்ளது. இளைஞன் எனும் படத்தை தயாரித்துள்ளார். இதற்கு கதை, வசனத்தை முதல்வர் கருணாநிதி எழுதியுள்ளார். முதல்வருடன் ஒரு மேடையில் மார்ட்டினும் பங்கேற்றார். எனவே, புகாரின் மீது விசாரணை நடத்த போலீசார் தயக்கம் காட்டுகின்றனர். எனது புகாரை பதிவு செய்ய, சேலம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும், என்று பாலாஜி தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் அலி, "மனுதாரர் கோர்ட் உத்தரவு நகலோடு புதிய புகார் ஒன்றை சேலம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அளிக்க வேண்டும். அதை விசாரித்து குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.