12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' |
பேராண்மை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தன்ஷிகா. இந்த படத்தில் மிக போல்டாக ஆக்ஷன் வேடத்தில் நடித்து இருந்தார். அதனைத்தொடர்ந்து நில் கவனி செல்லாதே படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்தார். ஒவ்வொரு படத்திலும் வித்தாயசமான கேரக்டரில் நடித்த இவருக்கு வசந்தபாலனின் அரவான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தில் ஆதிக்கு ஜோடியாக தன்ஷிகா நடிக்கிறார். 18ம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழக்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
அரவான் படத்தில் நடிப்பது குறித்து நடிகை தன்ஷிகா கூறியது: " பேராண்மை படத்தில் நடித்தது மூலம் நல்ல பட வாய்ப்புகள் வருகிறது. தற்போது வசந்தபாலன் இயக்கும் "அரவான்" படத்தில் நடிக்கிறேன். வரலாற்று பின்னணியில் இந்த படம் உருவாகி வருகிறது. படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். அந்த காலத்தில் பெண்கள் ஜாக்கெட் அணிவதில்லை. எனது வேடமும் அப்படித்தான். படம் முழுக்க ஜாக்கெட் அணியாமல் நடிக்கிறேன். ஆனால் கவர்ச்சி இருக்காது. ஏதோ படத்தில் வந்தோம், போனோம் என்று இல்லாமல் மனதில் பதியும் வேடங்களாக தேர்வு செய்து நடிக்கிறேன். கவர்ச்சியா, கவர்ச்சி இல்லாத வேடமா என்று பார்ப்பதில்லை. இதுதான் என் பாலிசி" என்றார்.