'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
துல்கர்சல்மான்- நித்யாமேனனை வைத்து ஓ காதல் கண்மணி என்ற படத்தை இயக்கிய மணிரத்னம், அடுத்தபடியாக நாகார்ஜூனா, மகேஷ்பாபு, ஐஸ்வர்யாராயை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு மெகா படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த கூட்டணியை வைத்துதான் ஓ காதல் கண்மணியே படத்திற்கு முன்பு ஒரு படம் இயக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார் மணிரத்னம். ஆனால், மகேஷ்பாபுவின் கால்சீட் அப்போது கிடைக்காததால் அந்த முயற்சியை தள்ளி வைத்து விட்டு, துல்கர்சல்மானை வைத்து ஓ காதல் கண்மணி படத்தை இயக்கினார்.
மேலும், ஓ காதல் கண்மணியே குறுகிய கால படம் என்பதால், வேகவேகமாக அப்படத்தின் படப்பிடிப்பை முடித்தார் மணிரத்னம். அதோடு, சமீபகாலமாக அவர் படப்பிடிப்பு தளத்தில் அதிக வேகத்துடன் காணப்படுவதாகவும் அவருடன் ஒர்க் பண்ணிய கலைஞர்கள் சொல்கிறார்கள்.
அதாவது, முன்பெல்லாம் பெரும்பாலும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே நடிகர் நடிகைகளிடம் வேலை வாங்கி வந்த மணிரத்னம், இப்போது கடல் படத்திற்கு பிறகு அடியோடு மாறி விட்டாராம். அதாவது படப்பிடிப்பு தளத்தில் ஆப் பேண்ட்- டீசர்ட் போட்டுக்கொண்டு சின்ன பையனாட்டம் ஒவ்வொரு வேலைகளையும் ஓடி ஓடி செய்கிறாராம் மணிரத்னம். அவரது இந்த திடீர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் உதவி இயக்குனர்களெல்லாம் தடுமாறிக்கொண்டு கிடக்கிறார்களாம்.