தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நீலிமா ராணி. அதையடுத்து தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தபோதும் ஒருகட்டத்தில் சீரியல் நடிகையானார். 10 வது படித்தபோது அச்சம் மடம் நாணம் என்ற தொடரியல் ஹீரோயினியாக சின்னத்திரைக்கு என்ட்ரி ஆனார். அதையடுத்து தேவயானி நடித்த மெட்டிஒலி, கோலங்கள், தென்றல், இதயம், செல்லமே, வாணி ராணி, தாமரை, பவானி என பல மெகா சீரியல்களில் நடித்து மெகா நடிகையாகி விட்டார். அப்படி அவர் நடித்ததில் மெட்டி ஒலி, கோலங்கள், செல்லமே போன்ற சீரியல்களில் நீலிமாவின் கேரக்டர் பெரிய அளவில் நேயர்களை கவர்ந்தது. அதன்காரணமாகவே இந்த மூன்று சீரியல்களுமே என் மனதை தொட்ட சீரியல்கள் என்கிறார் அவர். மேலும், சினிமா, சின்னத்திரை என இரண்டு மீடியாக்களிலும நடிக்கத் தொடங்கியதில் இருந்து இப்போதுவரை தனது அழகை ஒரே சீராக பராமரித்தும் வருகிறார் நீலிமா ராணி.
அந்த ரகசியம் குறித்து அவர் கூறுகையில், நான் ப்யூர் வெஜிடேரியன். நல்லாவும் சமைப்பேன். அதோடு டயட்ஸ் என்ற பெயரில் பட்டினி கிடப்பதில்லை. நல்லா சாப்பிடுவேன். அதேசமயம், உடற்பயிற்சியை தவறாமல் கடைபிடித்து வருகிறேன். அதனால்தான் என் உடம்பும், அழகும் மாறாமல் அப்படியே இருக்கிறது என்று கூறும் நீலிமாராணி, இப்போதுகூட எனக்கு திருமணமாகி விட்டது என்று சொன்னால் யாரும் நம்ப மறுக்கிறார்கள் என்றும் சொல்லி வெட்கப்படுகிறார்.