'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தன் நண்பர்கள் வட்டாரத்தில் ஏற்கனவே அறிவித்துவிட்டாராம் விஷால். ஆனாலும் இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருந்தார். பிரஸ்மீட்டில் செய்தியாளர்கள் கேட்டபோதெல்லாம் மழுப்பலான பதில்களையே சொல்லி வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஜூலை மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்படும்போது அதை வெளியே சொல்ல நினைத்துள்ளாராம் விஷால்.
இதற்கிடையில் நாடக நடிகர்களின் ஆதரவு இருந்தால்தான் வெற்றியடைய முடியும் என்பதால் புதுக்கோட்டையில் உள்ள முத்தமிழ் நாடக நடிகர்கள் சங்கத்திற்கு அண்மையில் சென்று வந்தார் விஷால். அங்குள்ள முக்கிய நாடகக்கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடிவிட்டு வந்த பிறகு உற்சாகமாக இருக்கிறார். புதுக்கோட்டையில் உள்ள நாடக நடிகர்களை சந்திக்க வேண்டும் என்ற யோசனையை அவருக்கு சொன்னதோடு, விஷாலை புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்றதும் நடிகர் கருணாஸ்தான்.
காரணம்.. கருணாஸின் சொந்த ஊர் புதுக்கோட்டைதான். எனவே அங்குள்ள தனது உறவினர்கள் நண்பர்கள் மூலம் நாடக நடிகர்களிடம் பேசி விஷால் வரவிருக்கும் தகவலை அவர்களிடம் தெரிவிக்க செய்திருக்கிறார். விஷாலுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சம்மதிக்க வைத்ததிலும் கருணாஸுக்கு பங்கு இருக்கிறது. இந்த விஷயம் தெரிந்ததும் சரத்குமார் தரப்பு கருணாஸ் மீது கடும் கோபத்தில் இருக்கிறதாம். கருணாஸோ அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் வரும் தேர்தலில் முக்கிய பதவிக்கு போட்டியிட தன்னை தயார் பண்ணி வருகிறாராம்.