ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் வருண்மணியனுக்கும் நடக்கவிருந்த திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது அனைவருக்கும் தெரிந்ததே. இது பற்றி வருண் மணியன் இதுவரை எதுவும் சொல்லாத நிலையில், த்ரிஷாவின் அம்மா திருமணம் நின்று போனதைப் பற்றி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இப்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் த்ரிஷாவும் அது பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
“திருமணம் நின்று போனது உண்மைதான். இது எதிர்பாராத ஒன்று, நம்மை மீறி ஒரு விஷயம் நடக்கும் போது, அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்போதைக்கு எனது கவனம் முழுவதும் நடிப்பின் மீதே இருக்கிறது. பழைய விஷயங்களைப் பற்றிப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்றுதான் பார்க்க வேண்டும். என் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்பதை கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன். நான் கடவுளின் குழந்தை, அவர் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார். கடவுளின் ஆசைப்படி எது நடக்கிறதோ அதை நான் ஏற்றுக் கொள்வேன்,” என்று சொல்லியிருக்கிறார்.