ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக சரத்குமார் உள்ளார். இவரது பதவிக்காலம் முடிந்து விரைவில் தேர்தல் நடக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் நடக்கும். காரணம் நடிகர் சங்கத்தில் தொடர்ந்து பதவி வகித்து வரும் சரத்குமார், ராதாரவியை வெளியேற்ற இளம் நடிகர்கள் ஒன்றாக இணைகிறார்கள். நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணியை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்ததில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக இளம் நடிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு நடிகர் விஷால் தலைமையேற்கிறார்.
வருகிற தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் சிவகுமாரும், செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு நாசரும் போட்டியிடலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் தற்போது தலைவராக உள்ள சரத்குமார் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். திருச்சியில் நடந்த சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு சென்றிருந்த சரத்குமார் இது தொடர்பாக நிருபர்களிடம் பேசும்போது "விஷாலுக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. சங்கத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான். அதை பொது இடத்தில் விவாதிப்பது சரியல்ல. சங்கத்தின் தேர்தலில் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன், விஷாலும் தாராளமாக போட்டியிடலாம்" என்று கூறினார் சரத்குமார்.