தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை ஹன்சிகா ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்த வளர்த்து வருகிறார். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஒரு குழந்தையை தத்தெடுப்பது அவரது வழக்கம். இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஆனால் வருகிற பிறந்த நாளின் போது 5 குழந்தைகளை தத்தெடுக்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: எனக்கு விபரம் தெரியாத காலத்திலேயே என் பெயரில் என் அம்மா குழந்தைகளை தத்தெடுக்க ஆரம்பித்து விட்டார். சினிமாவிற்கு வந்து நிறைய சம்பாதித்த பிறகு ஆரம்பித்த பணியல்ல இது. அதற்கு முன்பே தொடங்கியது. ஒரு வேளை நான் சினிமாவுக்கு வராமல் வேறு பணிக்கு சென்றிருந்தாலும் இதனை செய்திருப்பேன். எனது குழந்தைகளுக்காக மும்பை புறநகரில் ஒரு இடம் வாங்கியிருக்கிறேன். அதில் அவர்களுக்காக ஒரு இல்லம் கட்டப்போகிறேன். அதனால் இந்த ஆண்டு பிறந்த நாளின் போது 5 குழந்தைகளை தத்தெடுக்க இருக்கிறேன். எனது இந்த பணியை நான் விளம்பரப் படுத்திக் கொள்வதில்லை. ஆனால் மீடியாக்கள் தோண்டி துருவி கண்டுபிடித்து வெளியிட்டு விடுகிறார்கள். அவர்கள் கேட்கும்போது மறைக்கத் தோணவில்லை. அதனால் சொல்ல வேண்டியது இருக்கிறது. என்கிறார் ஹன்சிகா.