'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் எந்த வித குணசித்திர வேடங்களிலும் நடிக்கும் சக்தி வாய்ந்தவர் தலைவாசல் விஜய். ஆனால் அவரை தமிழ் சினிமா ஆட்டோக்காரனாகவும், குடிகாரனாகவும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டபோது மலையாள சினிமா ஸ்ரீ நாராயண குருவாக நடிக்க வைத்தது. இதற்காக அவர் சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதை பெற்றார். தற்போது அவர் பகவான் ஷீரடி சாய்பாபாவாக நடிக்கிறார். அபூர்வ மகான் என்ற டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தை டி.என்.எஸ்.தேவர் பிலிம்ஸ் சார்பில் செல்லத்துரை, செல்வம் தயாரிக்கிறார்கள்.
ஷீரடி சாய்பாபாவின் வாழ்கையை காட்டும் இந்தப் படத்தில் தலைவாசல் விஜய்யுடன் நடிக்கிறார். இளம் நடிகர்கள் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர எம்.எஸ்.பாஸ்கர், சுமன், டெல்லி கணேஷ், பிரேம், அஜய் ரத்னம், வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். வி.தஷி இசை அமைக்கிறார், ஜி.சீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.
"பாபாவின் மகிமையைச் சொல்லும் படம். அவரது வாழ்க்கையும், இன்றைய வாழ்க்கை சூழுலையும் இணைத்து சொல்லப்படும் கதை. இன்றைய இளைஞர்கள் பாபா வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. அதைக் காட்டும் படம்தான் இது. பாபாவின் அருள் முகத்தோடு இருக்கும் ஒரே நடிகர் தலைவாசல் விஜய். அவரை பாபாவாக நடிக்க வேண்டும் என்று கேட்டபோது என்ன சம்பளம் எத்தனை நாள் ஷ¨ட்டிங் என்று எதுவும் கேட்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்" என்றார் இயக்குனர் கே.ஆர்.மணிமுத்து.