சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
இந்த செய்தி உண்மையாக இருந்தால், கேட்பதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.. காரணம் மலையாள திரையுலகில் நாற்பது வருட வெற்றி வரலாறு கொண்ட, இயக்குனர் ஐ.வி.சசி இயக்கும் படத்தில் திந்த குளறுபடி. கமலை வைத்து 'குரு', ரஜினியை வைத்து 'காளி', 'எல்லாம் உன் கைராசி' ஆகிய படங்களை தமிழிலும் இயக்கியுள்ளார் ஐ.வி.சசி. ஆனால் மலையாளத்திலோ இவரது பேவரைட் மம்முட்டிதான்.. அதேசமயம் மோகன்லாலை வைத்தும் சில படங்களை இயக்கியுள்ளார்.
அதாவது மம்முட்டியை வைத்து ஐந்து படங்களை இயக்கினால் மோகன்லாலை வைத்து ஒன்றை இயக்குவார். ஆனாலும் மோகன்லாலுக்கு 'இனியெங்கிலும்' 'அனுராகி', 'தேவாசுரம்' என ஹிட்டுக்களையும் கொடுக்க தவறவில்லை. கடைசியாக மோகன்லாலை வைத்து 'ஷ்ரதா' என்ற படத்தை இயக்கினார் ஐ.வி.சசி. இப்போது வனவாசம் முடிந்தது போல் பதினான்கு வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லாலை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் என ஜனவரியிலேயே ஒரு தகவல் வெளியானபோது பலரும் சந்தோஷப்பட்டார்கள்.
காரணம் தனது 66 வயதில் கிட்டத்தட்ட 13௦ படங்களை இயக்கியுள்ள ஐ.வி.சசி., கடந்த ஐந்து வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது மோகன்லால் இவர் இயக்கத்தில் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம் இந்தப்படத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியை கிண்டல் செய்யும் விதமாக கதை பின்னப்பட்டுள்ளதாம். அதனாலேயே மோகன்லால் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தவிர இந்தப்படத்தின் கதையை, இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இணைந்து உருவாக்கியுள்ளார்களாம். பின்னே அரசியல் நெடிக்கு கேட்கவா வேண்டும்.